பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வாக உள்நாட்டில் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என தூத்துக்குடியில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை அங்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் செண்டை மேளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கட்சி மூத்த நிர்வாகிகள் பால்சிவயாதவ், நெல்லையாளன் ஆகியோரின் வீட்டுக்கு சென்று ஆசி பெற்றார்.
பின் தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாஜக கட்சி அடிப்படையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர்கள் படை நம் பக்கம் திரும்பி இருக்கிறது. இதற்கு காரணம் நம் கட்சிக்காக முன்னோர்கள், மூத்த நிர்வாகிகள் பிரதிபலன் பாராமல் உழைத்ததுதான்" என பேசினார்.
செய்தியாளர்களுக்கு மத்தியிலான அந்தப் பேட்டியில், “தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்து, 10 ஆண்டுகாலம் மத்திய அரசின் திட்டங்களை செயல்பாடுகளை பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அந்தக் காலத்தில் கும்பகர்ணன் தூங்கி எழுந்தது போல கண்மூடிக்கொண்டு மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் எதிர்த்து வந்தனர். இன்றும்கூட, ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டம், நீட் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் அதேநேரம் மத்திய அரசின் செயல்திட்டங்களை பலமட்டங்களில் வரவேற்கவும் செய்கின்றனர்.
தொடர்புடைய செய்தி: "விநாயகர் திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர எழுவார்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
உதாரணத்துக்கு தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது ‘கோ பேக்’ மோடி என சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்த திமுகவினர், இன்று அதே திட்டம் தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என குறிப்பிட்டு அந்த திட்டத்தின் மூலமாக 2000 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அதேபோல கொரோனா தடுப்பு பணிக்கு தமிழகத்திற்கு சரியான அளவில் தடுப்பூசி ஒதுக்காமல் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக திமுகவினர் விமர்சித்தனர். ஆனால், தமிழகத்தின் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தேவைக்கு அதிகமாக தடுப்பூசியை தமிழகத்திற்கு ஒதுக்கி மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, முன்னர் எதிர்கட்சியாக இருந்து விமர்சித்த திமுகவினர், இப்போது மத்திய அரசை புரிந்துக்கொண்டு ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர். இதுபோலவே, இன்னும் 3 மாதங்களுக்குள் வேளாண் சட்டங்களையும், நீட் தேர்வு விஷயத்திலும் திமுகவினர் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என நம்புகிறோம்.
பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த முறைப்படி என்ன செய்யமுடியும் என்பதை பாராளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி, நிரந்தர தீர்வாக உள்நாட்டில் அசாம், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு உற்பத்தியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். மிக வேகமாக பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை பாஜக அரசு கட்டுக்குள் கொண்டு வரும்” என்றார். கூட்டத்தில், மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜன்
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!