உத்தரப் பிரதேச மாநில இளைஞர்கள் ரக்ஷா பந்தன் பரிசாக தங்களது சகோதரிகளுக்கு கழிவறைகளை கட்டிக் கொடுத்துள்ளனர்.
பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது தான் ரக்ஷா பந்தன். வட இந்தியாவில் இந்நிகழ்ச்சி பிரபலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழா, ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினத்தன்று சகோதரர்கள், ரக்ஷா பந்தன் கயிறு கட்டும் சகோதரிகளுக்கு ஏதேனும் ஒரு பொருளை பரிசாக வழங்குவது வழக்கம்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்ட இளைஞர்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வான ரக்ஷா பந்தன் நாளில் அந்த மாவட்டத்தில் உள்ள தங்கள் சகோதரிகளுக்காக கழிவறையை கட்டிக்கொடுத்துள்ளனர். சுமார் 854 இளைஞர்கள் இணைந்து இந்தப் பணியை நிறைவேற்றியுள்ளனர். கழிவறை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அந்த இளைஞர்களுக்கு மானியம் வழங்குகிறது. கிராமப்பகுதியில் உள்ள பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுப்பதற்காகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்காகவும் கழிவறைகள் கட்டுவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்