நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரி திமுக நடத்தும் மனிதச்சங்கிலியில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் கட்சி பேதமின்றி பங்கேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில உரிமைப் பறிப்புக்கு எதிராகக் கொந்தளித்து எழ வேண்டிய தமிழக அரசு, டெல்லி ஆட்சியாளர்களிடம் கை கட்டி, வாய் பொத்தி கெஞ்சிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். நீட் தேர்விலிருந்து தற்காலிக விலக்கு பெறுவது தப்பிக்கும் தந்திரம் என்றும், அதனைக் கைவிட்டு நிரந்தர தீர்வு கிடைக்க உரத்தக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தவணை கேட்பதற்கும், தள்ளிப்போடுங்கள் என்று கெஞ்சுவதற்கும் நீட் தேர்வு விலக்கு விவகாரம் என்பது மத்திய அரசு தனது விருப்பம்போல் தரும் மானியமல்ல என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே தேர்வு என அறிவித்துவிட்டு, ஒரே மாதிரி கேள்வித்தாள் வழங்காததால் நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
“நான் யாரைக்கண்டும் அஞ்சவில்லை” - ராகுல் காந்தி
நாடாளுமன்ற கேன்டீனில் உணவுக்கான மானியம் ரத்து
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்பு
'தொடர் கஷ்டத்திலும் விடா முயற்சி'- ஆஸி டெஸ்ட்டில் கவனம் ஈர்த்த ஐந்து இளம் இந்திய வீரர்கள்!
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி