தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது வனத்துறை குறித்த அறிவிப்புக்கு நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கைத்தட்டலை கேட்டு வாங்கியது சிரிப்பலையை உண்டாக்கியது.
தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அப்போது “சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கத்துடன் மரம் நடும் திட்டத்தை 2011-2012 ஆம் ஆண்டில் இருந்து வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசின் நிலங்கள், தனியார் நிலங்கள் மற்றும் தரம் குன்றிய வனப்பகுதிகளில் நடப்பாண்டில் நடப்பட்டு வரும் 72 லட்சம் மரக்கன்றுகள் உட்பட 6.12 கோடி மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன” என ஓபிஎஸ் வாசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் கைத்தட்டினார். மற்ற யாரும் கைத்தட்டவில்லை. இதனால் பன்னீர்செல்வம் பட்ஜெட் வாசிப்பதை நிறுத்திவிட்டு அனைவரையும் பார்த்து “கைத்தட்டுங்களேன்... பாவம் அண்ணன் மட்டும் கை தட்டிக்கொண்டிருக்கிறார்” எனக்கூறி சிரித்தார். பின்னர் அனைவரும் கைத்தட்டினர். தொடர்ந்து ஓபிஎஸ் பட்ஜெட்டை வாசித்தார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?