இந்திய அணிக்கு எதிராக நாளை தொடங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிலர் இடம்பெறமாட்டார்கள் என்று கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. முதல் டெஸ்ட்டில் இந்தியா 277 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதமடித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் ஆன்லைன் மூலம் பேசிய ஜோ ரூட் "நாளையப் போட்டியில் ஆர்ச்சர், ஆண்டர்சன், பெஸ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடமாட்டார்கள். இது எங்களுக்கு சற்றே பின்னடைவுதான் என்றாலும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னெவன்றால் ஜோப்ரா ஆர்ச்சர் 3-ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பதாகவே முழுதும் தயாராகிவிடுவார்" என்றார்,
மேலும் பேசிய அவர் "டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்கள் இல்லாதது வருத்தமாக இருந்தது. ஆனால் நாளைய டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது மிகுந்த உற்சாகத்தை தருகிறது, நாளையப் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் பெஸ் இடம்பெறமாட்டார், இது ஒரு கடினமான முடிவுதான். ஆண்டர்சன் கடைசி இரண்டுப் போட்டியிலும் பஙகேற்க வேண்டும் என்பதால்தான் இப்போதே ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது" என்றார் ஜோ ரூட்
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி