அரிதான மரபணு நோயினால் அவதிப்பட்டு வரும் 5 மாத குழந்தையான டீராவின் உயிர்காக்கும் மருந்தின் மீதான ஆறு கோடி ரூபாய் இறக்குமதி வரியை தள்ளுபடி செய்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.
மும்பை - அந்தேரி பகுதியில் வசிக்கும் அந்த குழந்தையின் பெற்றோரான பிரியங்கா - மிஹிர் தம்பதியர் கிராவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டி, அந்த நிதியை கொண்டு அமெரிக்காவிலிருந்து 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை ஆர்டர் செய்துள்ளனர். அதை இந்தியாவில் இறக்குமதி செய்ய ஜி.எஸ்.டி வரிக்கான தொகையாக 6 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது.
இது தொடர்பாக தங்களது நிலையை பிரதமர் மோடியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உதவியுள்ளார். அவரும் தனது பங்கிற்கு மருந்து இறக்குமதி மீதான வரியில் விலக்கு கொடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தி இருந்தார்.
தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குழந்தை டீராவின் உயிர்காக்கும் மருந்தின் மீதான ஆறு கோடி ரூபாய் இறக்குமதி வரியை தள்ளுபடி செய்தது. மோடிக்கு நன்றி தெரிவித்து பட்னாவிஸ் கடிதம் எழுதியுள்ளார்.
Loading More post
சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ