ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தமிழ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜெமளலி இயக்கிவரும் 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது.
அதில், தமிழக உரிமையை சுமார் 50 கோடி ரூபாய் மத்திப்பில் லைகா நிறுவனம் கைபற்றியுள்ளது என கூறப்படுகிறது. தமிழகத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு பெரிய வியாபாரம் கிடையாது. இருந்தாலும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'மாவீரன்', நான் ஈ, பாகுபலி ஆகிய படங்கள் பெரும் வெற்றியடைந்தன. இதனால் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன் காரணமாகவே பெரிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!