சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்காமல் திணறினாலும் கீப்பர் ரிஷப் பண்ட் கலகலப்பாகவே பேசிக்கொண்டு இருந்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்தது. முதலில் விரைவாக 2 விக்கெட்டை இழந்தாலும் ஜோ ரூட் மற்றும் டோம் சிப்லே ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
இந்த இருவர் கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். ஆனால் ரிஷப் பண்ட் மட்டும் கலகலப்பாக ஸ்டம்புக்கு பின்னே நின்று பேசிக்கு கொண்டு இருந்தார்.
"Mera naam hai Washington, Mereko jana hai DC"
- Poet Rishabh Pant??#INDvENG #Pant #ViratKohli #Kohli #RishabhPant #Root #Rahane pic.twitter.com/QBmuSMUNp3 — Abhi Khade (@khadeabhishek1) February 5, 2021
ஆட்டத்தின் 70 ஆவது ஓவரின்போது டோம் சிப்லே பேட்டிங் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது வாஷிங்டன் சுந்தர் பவுலிங் செய்தார். அப்போது ரிஷப் பன்ட் "என்னுடைய பெயர் வாஷிங்டன் ஆனால் நான் டிசிக்கு போக வேண்டும்" என கத்தினார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாக வைரலானது. அமெரிக்காவின் தலைநகரை வாஷிங்டன் டிசி என கூறுவதுதான் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழக வீரரான வாஷிங்டனின் தந்தையான சுந்தர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உதவிகரமாக இருந்த வாஷிங்டன் என்ற நண்பரின் பெயரினை தன் மகனுக்கு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்