காரைக்காலில் இருந்து சாராயம் கடத்திய அமமுக இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டார். 1000 பாக்கெட் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, காரில் சாராய பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து பாண்டி ஜூஸ் என்று அச்சிடப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள 1000 சாராய பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் பகுதியை சேர்ந்த சர்புதீனை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட சர்புதீன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காரைக்கால் மாவட்ட இளைஞரணி செயலாளர் என்பதும், கோட்டுச்சேரியிலிருந்து திருவாரூருக்கு விற்பனைக்காக சாராய பாக்கெட்டுகள் கடத்திச் செல்லப்பட்டதும் தெரியவந்தது.
Loading More post
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
கொரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் இன்று ஆலோசனை!
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி