துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த அவதூறு வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் பரப்புரை தொடங்கியிருக்கிறார். அவர் இந்த மாத முதல் வாரத்தில் மண்ணிச்சநல்லூர் பரப்புரையில் பேசியபோது, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், இதை தான் நிரூபிக்க தயாராக இருப்பதாகவும், தன்மீது வழக்கத் தொடர முடிந்தால் தொடருங்கள் என்றும் சவால் விடுத்திருந்தார்.
இதனால் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்குத் தொடரப்பட்டது. அதில், உதயநிதியின் பேச்சு குறித்தும், இதுபோன்ற வழக்குகளில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவது குறித்து தடைவிதிக்கவேண்டும் என்ற இடைக்கால கோரிக்கையும், இதுபோல தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்கு 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?