உத்தரப்பிரதேசத்தில் டால்பின் மீனை கொடூரமாக அடித்துக் கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், ஆற்றின் கால்வாயில் காணப்பட்ட அரிய வகை டால்பின் மீன் ஒன்றை ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர் கும்பல் ஒன்று கோடரி, கட்டைகளை கொண்டு அடித்து கொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோ பார்ப்பவர்களைக் கலங்கச் செய்தது.
இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், அந்த வீடியோ உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் பகுதியில் எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து, வீடியோ பதிவில் தெரிந்த அடையாளத்தின் அடிப்படையில் 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்தியாவில் மட்டுமே காணக் கூடிய நன்னீர் டால்பின் வகைகளில் ஒன்று கங்கை நதி டால்பின். இதன் மற்றொரு பிரிவு சிந்து நதி டால்பின் என அழைக்கப்படுகிறது. மிகவும் அரிதான, தீங்கிழைக்காத உயிரினங்களில் ஒன்றான இந்த மீனைதான் கும்பல் அடித்துக் கொன்றுள்ளது.
Heart-wrenching tragedy in Bhandara, Maharashtra, where we have lost precious young lives. My thoughts are with all the bereaved families. I hope the injured recover as early as possible.
— Narendra Modi (@narendramodi) January 9, 2021Advertisement
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு