டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 41 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் இன்று 41ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அரசுடன் நடந்த 7ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில், 3 சட்டங்களையும் திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக கூறினர். ஆனால் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரலாம் சட்டங்களை வாபஸ் பெற இயலாது என அரசும் உறுதியாக கூறிவிட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து வரும் 8 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் முனைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால் குடியரசு தினத்தன்று டெல்லிக்கு டிராக்டர் மூலம் பேரணியாக செல்லப்போவதாகவும், வரும் 13 ஆம் தேதி போகிப் பண்டிகையன்று புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாடப் போவதாகவும் விவசாய அமைப்புகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ