சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட வாய்ப்பு இல்லை என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்துமே மூடப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. மாணவர்களின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டன. ஆனால் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகள் ஜனவரி மாதத்திலும், பொதுத்தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதத்தில் நிறைவு பெறுவது வழக்கம். ஆனால் இந்த கல்வியாண்டில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்த நடைமுறை சாத்தியமில்லை என கூறியுள்ள அமைச்சர் பொக்ரியால் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என அறிவித்தார்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி