ஆதரவற்ற மாணவியை தத்தெடுத்ததோடு அவரது டாக்டர் கனவையும் நிறைவேற்றுவதாக ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா உறுதி அளித்துள்ளார்
தென்னிந்திய திரைத்துறையின் நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா ஆதரவற்ற மாணவி ஒருவரை தத்தெடுத்துள்ளார். அதோடு அந்த மாணவியின் மருத்துவ லட்சிய கனவையும் நிறைவேற்றுவதாக உறுதி ஏற்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சிகப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பகுமாரி. ஆதரவற்ற மாணவியான அவர் திருப்பதியில் உள்ள பெண் குழந்தைகள் நல மையத்தில் தங்கி மேல்நிலைப்பள்ளிக் கல்வியை நிறைவு செய்துள்ளார். மருத்துவராக வேண்டுமென்ற லட்சியம் கொண்ட அவர் நீட் தேர்விலும் தகுதி பெற்றுள்ளார். இருப்பினும் பொருளாதார சிக்கலினால் மருத்துவ கல்லூரியில் சேர உதவி கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அறிந்து கொண்ட ரோஜா தனது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளான இன்று (21/12/20) அந்த மாணவியை தத்தெடுத்து, அவரது டாக்டர் படிப்பிற்கு தேவையான மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி ஏற்றுள்ளார்.
எம்.எல்.ஏ. ரோஜாவிற்கு நன்றி சொல்லியதோடு மருத்துவரானதும் ஏழை மக்களுக்கு சேவை செய்ய உள்ளதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!