வானில் இரண்டு கருந்துளைகள் இணையும் அரிய நிகழ்வைப் படம்பிடித்துள்ளது நாசா.
உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, வானில் நடக்கும் அரிதான நிகழ்வுகளையும் படம் பிடித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது வான்வெளியில் இரண்டு மிகப்பெரும் கருந்துளைகள் இணையும் அரிய நிகழ்வைப் படம்பிடித்து, நாசாவின் சந்திரா எக்ஸ் - ரே கண்காணிப்பகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா, 'என்.ஜி.சி 6240' என்ற பால்வெளியில், இரண்டு மிகப்பெரும் கருந்துளைகள் இணையும் நிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு கருந்துளைகளும் 3,000 ஒளியாண்டு (ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு வானியல் சொல்) இடைவெளியில் இருக்கின்றன. இவை இரண்டும் ஒன்றாக இணைந்து, ஒரு மிகப்பெரிய கருந்துளையை உருவாக்கப் போகின்றன. அது இன்றிலிருந்து பல கோடி ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கருந்துளையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
நாசா வெளியிட்ட இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கருந்துளை என்றால் என்ன?
1916-ம் ஆண்டு, கருந்துளை என்று ஒன்று இருக்கலாம் என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கணித்தார். அப்போது `கருந்துளை' என்ற பெயர் பழக்கத்தில் இல்லை. 1967-ம் ஆண்டுதான் அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஜான் வீலர் `கருந்துளை' என்ற பெயரை உருவாக்குகிறார். அதுவரை இருக்கிறதா? இல்லையா? என்ற கணிப்புகளிலேயே இருந்த கருந்துளை முதன்முதலாக 1971-ம் ஆண்டு கண்டறியப்பட்டது.
ஸ்டெல்லர் கருந்துளைகள் (Stellar blackholes), சூப்பர்மேசிவ் கருந்துளைகள் (Supermassive Blackholes) மற்றும் இன்டர்மீடியட் கருந்துளைகள் (Intermediate Blackholes) என கருந்துளையின் அளவைப் பொறுத்து அதை மூன்றாக அறிவியலாளர்கள் பிரிக்கின்றனர்.
Loading More post
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு