நடிகர் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரபல நடிகர் கார்த்தியின் மகன் கெளதம் கார்த்திக். இயக்குநர் மணிரத்னத்தின் ‘கடல்’ படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘ஹர ஹர மகாதேவ்கி’,‘தேவராட்டம்’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில், சைக்கிளில் பயிற்சி மேற்கொண்டிருந்த கெளதம் கார்த்திக்கை தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரின் விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்றனர். இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மயிலாப்பூர் குயில் தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், திருட்டு செல்போனை விலைக்கு வாங்கியதாக ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பைரூஸ்கான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!