செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு குறைந்த 72 ஏரிகளில் உள்ள நீரின் அளவை 2 அடி குறைக்க ஏதுவாக பொதுப்பணித் துறையினர் நீரை வெளியேற்றி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 528 ஏரி உள்ளன. இந்நிலையில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் 75 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மீதமுள்ள ஏரிகள் 75% முதல் 50% வரை நிறைந்துள்ளது.
இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்யும் என்பதால் இந்த ஆண்டு ஏரிகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள 72 ஏரிகள், மழையை எதிர்கொள்ளும் வகையில் தற்போது ஏரியில் உள்ள நீர் இருப்பில் இரண்டு அடி தண்ணீரை நேற்று முதல் உபரி நீர் வெளியேறும் பகுதியின் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள வெள்ள போக்கி மூலம் வெளியேற்றப்படுகிறது.
அவ்வாறு வெளியேற்றப்படும் நீர் தற்போது ஓடையின் மூலம் கடலுக்குச் செல்கிறது. அதேபோன்று ஏரிகளை கண்காணிக்க ஏரிக்கு ஒருவரை நியமனம் செய்து 72 ஏரிகளையும் பாதுகாத்து வருகின்றனர். தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ஜேசிபி எந்திரங்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!