மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் குறைந்திருப்பதை அடுத்து, வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தால், நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொற்று குறைந்த மாநிலங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயில்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களை அனுமதிக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஷீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதே நேரம் இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா விதிமுறைகளின் படி, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!