உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார்.
தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலை சந்தித்த நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என இருக் கட்சி தரப்பிலும் கூறப்படுகிறது. அதே சமயம் வேல் யாத்திரை தொடர்பான பிரச்னையில், அரசின் அனுமதி மறுப்பும் அதனை மீறும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் அவர் வரும் 21ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமித்ஷா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகம் வரும் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். துறை ரீதியான பணிகள் காரணமாக அமித்ஷா தமிழகம் வர உள்ளதாகவும், தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் அமித்ஷா விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது “ பாஜக மூத்தத் தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை எதிர்கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்கியுள்ளது. அவர், வேல் யாத்திரையில் பங்கேற்க மாட்டார். அதேசமயம் அவர் முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளது” என்றார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி