கொரோனா தொற்றுள்ள நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனராக இருப்பவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ். இவருடன் கொரோனா பாதித்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். இதுபற்றி அறிந்த கெப்ரேயஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கெப்ரேயஸ் தனது ட்விட்டரில் பதிவில் கூறுகையில், ‘’கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட நபர் என்னை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. நான் நலமுடனேயே உள்ளேன். அறிகுறிகள் எதுவும் இல்லை.
எனினும், வருகிற நாட்களில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள்படி, என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன். வீட்டில் இருந்தபடியே பணி செய்வேன். நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியம்.
இதன் வழியே கொரோனா பரவலின் சங்கிலியை நாம் உடைத்தெறிய முடியும். கொரோனாவை ஒழிக்க முடியும். கொரோனா பாதிப்புகளில் இருந்து நாடுகளை பாதுகாப்பதற்கும் வேண்டிய பணிகளை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து மேற்கொள்ளும்’’ என்று அவர் கூறியுள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்