நாமக்கல்லில் 300 கிலோ கஞ்சா கடத்திய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நாமக்கல் வழியாக லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலில் அடிப்படையில் நாமக்கல் முருகன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த சரக்கு லாரியை நாமக்கல் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, 15 மூட்டைகளில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதன்பின் லாரியில்சே வந்த லம் மாவட்டத்தை சேர்ந்த கஞ்சா விபாபாரி பழனி (55) மற்றும் லாரி ஓட்டுனர் ராஜ்குமார் (34) மீது வழக்கு பதிந்து, கைது செய்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைதான இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து ஆட்சியர் மெகராஜ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?