ஹைதராபாத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவன் இறந்த சோகத்தை தாங்கிக்கொள்ளமுடியாத மனைவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஹைதராபாத்தின் சைனக்புரியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது கணவனுடன் வசித்து வந்திருக்கிறார் 55 வயது பெண்மணி. அந்தப் பெண்ணின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலைசெய்துவந்த அந்த பெண்ணையும் வீட்டில் தனிமைபடுத்தி இருந்திருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனை அந்த பெண் கவனித்து வந்திருக்கிறார். ஆனால் நிலைமை மோசமாகவே வியாழக்கிழமை அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
குழந்தைகளும் இல்லாத தனக்கு ஆதரவாக இருந்த கணவனின் இழப்பைத் தாங்கிக்கொள்ளமுடியாத அந்தப் பெண் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். பலத்த அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
Loading More post
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!