டெல்லியில் E காமர்ஸ் நிறுவனமான அமேசானில் டெலிவரி பாயாக பணி செய்யும் 22 வயது இளைஞர் ஒருவர் கஸ்டமர் ஆர்டர் செய்த செல்போனை வேறொருவரிடம் விற்றுவிட்டு, கஸ்டமரிடம் ஆர்டர் கேன்சல் என சொல்லியுள்ளார்.
அதோடு உங்களது பணம் விரைவில் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும் எனவும் அவர் சொல்லியுள்ளார்.
இதனையடுத்து அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்ட அந்த வாடிக்கையாளர் REFUND தொகை குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு உங்களது போன் ஏற்கனவே டெலிவரி ஆகியுள்ளது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அந்த வாடிக்கையாளருக்கு டெலிவரி பாய் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பணத்திற்காக அந்த செல்போனை வேறொருவரிடம் டெலிவரி பாய் விற்றதை உறுதி செய்தனர். அதோடு இந்த குற்றத்தை செய்தது டெல்லி - கீர்த்தி நகரை சேர்ந்த மனோஜ் என்பதையும் போலீசார் அடையாளம் கணடனர்.
அவரை இந்திய தண்டனை சட்டம் 420இன் கீழ் கைது செய்த போலீசார் அந்த செல்போனையும் மீட்டுள்ளனர்.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி