உயிரிழந்தவரின் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சைக்காக மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டிக் கொண்டு வந்த ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதுரையை சேர்ந்த வேல்முருகன்(27) என்பவர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் விரும்பினர். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக வெங்கடேஷ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு வேல்முருகனின் சிறுநீரகத்தை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இதையடுத்து மதுரையிலிருந்து சுமார் மூன்றரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் சிறுநீரகம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிக்க 50 க்கும் மேற்பட்ட பகுதிகளில் 150 க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
தொடர்ந்து நாகர்கோவில் மாநகரில் உள்ள குறுகலான சாலையில் ஆம்புலன்ஸ் வேகமாக வர முடியாது என்பதால் ஆம்புலன்ஸில் இருந்த சிறுநீரகம் கார் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறுநீரகம் வெங்கடேஷுக்கு பொருத்தப்பட்டது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?