கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலங்களான தூண் பாறை, குணா குகை அடங்கிய பகுதிகளை அக்டோபர் மாதம் முதல் திறக்க வனத்துறையினர் பரிசீலனை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இபாஸ் பெற்றுக்கொண்டு வர கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அரசு அனுமதி அளித்தது. அதே நாளில் பிரயண்ட் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் செட்டியார் பூங்காக்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதித்தது. அதனைத்தொடர்ந்து வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்கா மற்றும் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அரசு அனுமதித்தது.
இப்பகுதிகள் தோட்டக்கலை மற்றும் நகராட்சி வசம் உள்ள பகுதிகளாக இருந்த நிலையில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை மற்றும் தூண் பாறை அடங்கிய 12 மைல் சுற்றுலா தலங்களை அக்டோபர் மாதம் முதல் திறக்க வனத்துறை பரிசீலனை செய்து வருவதாக, வனத்துறையின் ஒருங்கிணைந்த சுற்றுலா தலங்களுக்கான வனச்சரகர், கிருஷ்ண சாமி தெரிவித்துள்ளார்.
அதற்கான அறிவிப்பு மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் சுற்றுலா சார் தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
“சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி காலியாக உள்ளது” - டிடிவி தினகரன்
தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.... மாவட்ட வாரியான கள நிலவரம்
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை