கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட, 1.60 லட்சம் மதிப்புள்ள 960 போலி மது பாட்டில்களை தருமபுரி மதுவிலக்கு அமல்பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
கர்நாடகாவில் இருந்து வெள்ளிச்சந்தை வழியாக தருமபுரிக்கு போலி மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக, காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தருமபுரி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், மதுவிலக்கு பிரிவினர் வெள்ளிச்சந்தை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று மதியம், அந்த வழியாக வந்த மாருதி எஸ்டீம் கார் மற்றும் அதற்கு முன்னால் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், துரத்திச் சென்று இருசக்கர வாகனம் மற்றும் காரை ஓட்டி வந்த, இருவரை பிடித்து, காரை சோதனை செய்தனர்.
அப்போது, காரில் 960 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரிடம் விசாரித்த போது, ஒருவர் பாப்பாரப்பட்டியை சேர்ந்த மணி என்பதும், காரை ஓட்டி வந்தவர் பெங்களூர் ஆனைக்கல்லை சேர்ந்த சிராஜ்தீன்கான் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 960 போலி மதுபாட்டில்களும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Loading More post
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?