மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகள் முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் யுபிஎஸ்சி இணையதளம் மூலம் இ - அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து அதன் அச்சுப்பிரதியை எடுத்துவரவேண்டும். இதனை தேர்வுமையத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்கவேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் எடுத்துவரவேண்டும்.
தேர்வு எழுதும் மாணவர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே ஓஎம்ஆர் தாளில் பயன்படுத்தவேண்டும். சாதாரண கைக்கடிகாரங்களைப் பயன்படுத்தலாம். ஃமொபைல் போன்கள், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச், புளூ டூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தங்களுக்கான கிருமிநாசினி திரவத்தை தெளிவான பாட்டில்களில் கொண்டுவரவேண்டும்.
தேர்வுக்கூடத்திலும் வளாகத்திலும் சமூக இடைவெளி, தனிமனித சுகாதாரம் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என பல வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
Loading More post
குடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!
குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி
குடியரசு தின கொண்டாட்டம்.. விவசாயிகள் பேரணி.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்