சாதாரண நாட்களைவிட கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகால நீரிழிவு, தைராய்டு, அதீத மன அழுத்தம், இரும்புச் சத்துக் குறைபாடு, அனீமியா, எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். சரிவிகித உணவுமுறை அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். அவர்களுக்கு சமையலறையிலேயே அளவுக்கதிகமான ஊட்டச்சத்துகள் கொட்டிக்கிடப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பயிறுகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் என அனைத்தையும் முறையாக எடுத்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை சரியான அளவில் கிடைக்கும்.
கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்யமான வளர்ச்சிக்கு கால்சியம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் புரதம் ஆகியவை மிகமிக அவசியம்.
தானியங்கள், பயிறு வகைகள், பருப்புகள், சிட்ரஸ் பழங்கள், பச்சை இலைகள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. எனவே இவை அனைத்தும் தினசரி உணவில் இருக்கவேண்டும்.
பால், தயிர், சீஸ், மீன் போன்றவை கருவின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றை வழங்கும்.
சாதாரண நாட்களைவிட கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இரண்டு மடங்கு இரும்புச் சத்துத் தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறையுபோது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கணிசமாகக் குறைந்துவிடும். எனவே பச்சை இலைகள், காய்கறிகள் மட்டும் சிட்ரஸ் பழங்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
தானியங்கள், பால் மற்றும் பயிறு வகைகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனவே இவை அனைத்தும் கர்ப்பிணிப் பெண்களின் தினசரி உணவில் இடம்பெற்றிருக்கவேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் செயல்திறன் பாதிக்கப்படும் மற்றும் அவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிரமம் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!