திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே கடந்த 28 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு கொண்டு செல்லும்போது வெடித்ததில் 2 ரவுடிகள் படுகாயம். இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரில் இரவு சுமார் ஒன்பது முப்பதுமணி அளவில் இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு சென்றபோது வெடிகுண்டு தவறுதலாக பயங்கர சத்தத்துடன் வெடித்தில் அசோக் மற்றும் விக்கி என்ற விவேக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்ட திருப்போரூர் போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அசோக் கேளம்பாக்கம் ஜோதிநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டில் இருந்து நேற்று 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
மேலும் பட்டாக்கத்தி ஒன்றும் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அசோக் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.
மேலும் விக்கி என்ற விவேக் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் இவர்களுடைய நண்பர்கள் 3 பேரை கைது செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!