மதுரை தேனி மெயின் ரோட்டில் உள்ள தனியார் மரக்கடைத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை எஸ் எஸ் காலனியைச் சேர்ந்த சேதுராமன் என்பவருக்கு சொந்தமான மரத்திலாலான பர்னிச்சர் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை நகர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 35 பேர் மூன்று வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்றரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான மர பர்னிச்சர் பொருட்கள் தீயில் கருகி சேதமானது. இச் சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என்பதி முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?