‘கொரோனா நோய் தொற்றுக்கான சிகிச்சையை தாமதிப்பது மிகவும் ஆபத்தில் நம்மை கொண்டு சேர்க்கலாம்’ என்று அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு முதல் வாரத்திற்குள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை விட, இரண்டாவது வாரத்தில் கண்டறிந்து தாமதமாக சிகிச்சைக்கு செல்பவர்களிடையே வைரஸால் உண்டாகும் நுரையீரல் நியுமோனியா வீரியமாக இருக்கின்றது
மேலும் எவ்வளவு சீக்கிரம் தொற்றை உறுதி செய்து சிகிச்சையை ஆரம்பிப்பது உயிரைக் காக்கும் செயலாக இருக்கிறது என்று பல ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
இன்னும் மும்பை மருத்துவமனை ஒன்றில் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி, கொரோனா தொற்றால் சேதமடைந்த நுரையீரலானது நிரந்தரமாக சிதில நிலைக்குச்செல்வதாகவும் (Pulmonary fibrosis) தகவல்கள் கூறுகின்றன
அதனால் காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் தோன்றினால் உடனே பரிசோதனை செய்து மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சையை தாமதிப்பது மிகவும் ஆபத்தில் நம்மை கொண்டு சேர்க்கலாம்’’ என்றார்.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!