கணவன் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மனைவியை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சை மேலஅலங்கத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி நீலாவதி (46). கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் வீரமணி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நீலாவதி மனவேதனையில் இருந்துள்ளார்.
வீட்டில் யாருடனும் பேசாமல் சோகத்தில் இருந்த நீலாவதி இன்று காலை தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள கல்லணை கால்வாய்க்கு சென்று அங்கு திடீரென ஆற்றில் குதித்தார். தண்ணீரின் வேகம் அதிகரிப்பால் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தண்ணீரில் தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது.
தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றில் குதித்து நீலாவதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
குடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!
குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி
குடியரசு தின கொண்டாட்டம்.. விவசாயிகள் பேரணி.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்