மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் நேற்று ஒரே நாளில் 3428 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அங்கு, நேற்று ஒரேநாளில் 3428 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1,04,568 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 113 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தம் இதுவரை 3830 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக பரபரப்புக்கு பஞ்சமில்லாத மும்பை அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. மும்பையில் மட்டும் நேற்று 1380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தின உயிரிழப்பு மட்டுமே 69ஆக உள்ளது. இதுவரை மும்பையில் 2,113 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 49,346 பேர் குணமடைந்துள்ள நிலையில் 51,392 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும் விதமாக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை மகாராஷ்டிரா அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது. ரூ.4500ஆக இருந்த கட்டணம் தற்போடு ரூ.2200ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு சொந்த செலவில் உதவிய சென்னை கமிஷ்னர் !
Loading More post
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி