மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிமுறையை மீறி தனியார் வங்கி ஒன்று வாடிக்கையாளர் வங்கிக்கணக்கிலிருந்து மாதத் தவணை பிடித்ததாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒருவர் புகார் .அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி, பொதுமக்கள் வங்கிகளில் பெற்றுள்ள பல்வேறு கடன்களுக்கு மாதத் தவணையைச் செலுத்த 3 மாதங்கள் விலக்களித்தது. இந்நிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தனியார் வங்கி மீறியுள்ளதாக வானகரத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “அம்பத்தூரில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான தலைமை வங்கியில் கடந்த 2002 ம் ஆண்டு முதல் நான் மணல் லாரி வாங்கியதற்கான வாகன கடன் உள்ளது. இதற்கான மாதத் தவணையை மாதம் தவறாமல் செலுத்தி வந்தேன். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதால் எனக்கு வருமானம் இல்லை. ஆகவே அரசின் உத்தரவை வங்கிகள் பின்பற்றும் என நம்பி இருந்த நான் முன்னதாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தை மட்டும் அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தேன். ஏப்ரல் மாதம் வரை கடனுக்கான தொகைப் பிடித்தம் செய்யப்படவில்லை.
ஆனால் வங்கியோ இந்த மாதம் 5.5.2020 அன்று மாதத் தவணை தொகை 65,590 ரூபாயை பிடித்தம் செய்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறை ஆய்வாளர் விஜயராகவன் வங்கி நிர்வாகத்தினை அழைத்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
Loading More post
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?