தோனியும் உணர்ச்சிகள் கொண்ட மனிதர்தான், எப்போதும் கூலாக இருக்க மாட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தைப் பேசிவிடுகின்றனர்.
கிரிக்கெட் உலகில் தோனியை "கேப்டன் கூல்" என பொதுவாக அழைப்பது உண்டு. அதாவது மிகவும் நெருக்கடியான தருணத்தில் அவர் பொறுமையை இழக்கமாட்டார். மேலும் சக வீரர்களைக் கடுமையாகப் பேசமாட்டார், தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டமாட்டார். மிக முக்கியமாக மைதானத்தில் போட்டியின்போது கோபப்படமாட்டார். ஆனால் சில நேரங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்ட சம்பவங்கள் நடந்தாலும், உலகின் மற்ற கேப்டன்களை ஒப்பிடுகையில் தோனி கூல் மேன்தான்.
இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸுக்குப் பேட்டியளித்துள்ள கவுதம் காம்பீர் "தோனி பொதுவாகக் கோபப்படமாட்டார் என மக்கள் சொல்வார்கள். ஆனால் அவர் கோபப்பட்டு நான் இருமுறை பார்த்திருக்கிறேன். 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை போட்டியின்போது சில நேரங்களில் நாங்கள் சிறப்பாக விளையாடாத போது தோனி கோபப்பட்டு இருக்கிறார். அவரும் மனிதர்தானே, அவருக்கு வரும் கோபமும் நியாயமானதாகவே இருக்கும். அதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளின் போது பீல்டிங்கை சரியாகச் செய்யாத வீரர்கள் மீதும் கோபப்பட்டு இருக்கிறார் தோனி" என்றார்.
மேலும் தொடர்ந்த காம்பீர் "ஆனாலும் தோனி கூல்தான். உலகில் உள்ள மற்ற நாடுகளின் கிரிக்கெட் அணியின் கேப்டன்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால். தோனி நிதானமானவர்தான். கேப்டன் கூல்தான்" என்றார்.
Loading More post
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!
விவசாயிகள் போராட்டம்: பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட டிராக்டர்கள்
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!