இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்களும், மருத்துவர்களுமான தந்தை மற்றும் மகள் அமெரிக்காவில் கொரோனா நோய்த் தாக்கத்தால் உயிரிழந்தனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் மருத்துவர் சத்யேந்தர் தேவ் கண்ணா (78). இவரது மகள் பிரியா கண்ணா (43). இவர்கள் இருவருமே அமெரிக்காவில் மருத்துவர்களாகப் பணியாற்றி வந்தனர். சத்யேந்தர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸில் உள்ள மருத்துவமனையில் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகத் திகழ்ந்தவர். இவரது மகள் பிரியா கண்ணா, மருத்துவமனையின் தலைவராக இருந்தவர்.
இவர்கள் இருவருமே தற்போது அமெரிக்காவை முடக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் சேவை செய்தனர். இதன்மூலம் இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சத்யேந்தர் கண்ணாவிற்கு கிளாரா மாஸ் மெடிக்கல் மையத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து மகள் பிரியா கண்ணாவிற்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர்களது இழப்பு ஈடு செய்ய முடியாதது என நியூ ஜெர்ஸியின் ஆளுநர் முர்ஃபி தெரிவித்துள்ளார். அத்துடன், “இருவரும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக கொரோனாவால் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க எங்களிடம் வார்த்தை இல்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?