தமிழ்நாடு கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விளையாட உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இல்லாத குறையை போக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டிஎன்பிஎல் தொடரை கடந்த ஆண்டு ஆரம்பித்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஆண்டு இந்தப் போட்டி ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, கிராமப்புற வீரர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளது. இதில் விளையாடிய நடராஜன் உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வருட போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்த சுரேஷ் ரெய்னா , யூசுப் பதான், பியூஸ் சாவ்லா, சாஹல் உட்பட சில வீரர்கள் விளையாடுகிறார்கள். கடந்த ஐபில் போட்டியில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், திண்டா, உன்முக்த் சந்த், மனோஜ் திவாரி, மனன் வோரா உட்பட சில தெரிந்த வீரர்களும் விளையாட இருக்கின்றனர்.
'தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் இருந்து 80 வீரர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் 24 வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு அணியிலும் மூன்று வெளிமாநில வீரர்கள் இடம்பிடிப்பார்கள்’ என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
Loading More post
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
”தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை” - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
கொரோனா பரவல்: தேர்தல் பேரணிகளை ரத்து செய்த ராகுல் காந்தி
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி