கோயம்பேடு சந்தையை மையமாகக் கொண்டு கொரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்பேடு சந்தையை மையமாகக் கொண்டு சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்தது. அத்துடன் கோயம்பேட்டில் இருந்து தஞ்சாவூர் சென்ற ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து கடலூர் சென்ற மேலும் 8 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோயம்பேட்டிலிருந்து கடலூர் சென்ற 9 பேருக்கு ஏற்கெனவே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் திரும்பியவர்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் சென்றவர்களில் புதிதாக 32 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம் சென்ற 7 பேருக்கு தொற்று ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் துரிதப்படுத்தியுள்ளன. இவ்வாறாக கோயம்பேடு மூலம் கொரோனா பரவிய நபர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.
Loading More post
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
ஐபிஎஸ் அதிகாரிக்கே இவ்வளவு சிக்கலென்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- உயர் நீதிமன்றம்
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?