ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வாலிபர்களின் பைக்கை பிடித்த காவலர் பைக்குடன் சேர்த்து தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. குறிப்பாக,
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் ஒன்றான மும்பை நகரத்தில் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் மும்பையின் டோங்கிரி பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை, ஜல்லிக்கட்டு காளையை பிடிப்பதுபோது போல காவலர் ஒருவர் பாய்ந்து பிடித்தார்.
ஆனால் வாகனத்தை ஓட்டி வந்த இருவரும் வண்டியை நிறுத்தாமல் காவலரை தரதரவென இழுத்துச்சென்றனர். வாகனம் சிறிது தூரம் சென்றதும் கவிழ்ந்தது. இதில் அந்தக் காவலர் காயமடைந்தார். தற்போது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
Loading More post
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்