திருச்செந்தூரில் தையல்காரர் ஒருவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு முககவசங்களை இலவசமாக தைத்து வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 870 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையானது 20 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 42 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் சீன கருவிகள் ?
மேலும் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக விலகல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது பெரும்பாலான கடைகளில் முகக்கவசம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த தையல்காரர் ஒருவர் தனது சொந்த செலவிலேயே மக்களுக்கு முகக் கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.
"மலர் சந்தை மூடப்பட்டதால் கருகி வரும் மல்லிகை" விவசாயிகள் வேதனை !
திருச்செந்தூரில் தையல்கடை நடத்தி வருபவர் செண்பகராமன். இவர் தசரா காலங்களில் சுவாமி சிலைகளுக்கு தேவையான முகமூடிகள், வேடப்பொருட்கள் போன்றவைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பாதிப்பையடுத்து, மக்கள் முகக்கவசம் கிடைக்காமால் தவித்து வருவதை அறிந்த செண்பகராமன் தனது சொந்த செலவில் ஏழை எளிய மக்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்களை இலவசமாக தைத்து வழங்கியுள்ளார்.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'