நாமக்கல்லில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளிகள் அரசு அதிகாரிகள் வந்து எச்சரித்த பின் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பின.
கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 31 வரை மூட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அரசு உத்தரவை மீறி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பினரையும் வழக்கம்போல் பள்ளிக்கு அழைத்ததாக தெரிகிறது.
பெற்றோர்களும் ஆபத்தை உணராமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது, அரசு உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளை உடனடியாக மூடவேண்டும், மீறி செயல்பட்டால் காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து திறக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பள்ளிகளில் இருந்து அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். பள்ளிகளும் மூடப்பட்டன.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்