தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படுவது, ஆலய கருவறைக்குள் நுழையும் முயற்சியில் தமிழுக்கு கிடைத்த முதல் வெற்றி என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், எதிர்காலத்தில் கோயில்களில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் விருப்பம் என தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், "ஆலய கருவறைக்குள் நுழையும் முயற்சியில் தமிழுக்கு முதல் வெற்றி. தமிழில் குடமுழுக்கு நடத்தப்படுவதில் ஒரு வரலாறு நிகழ்ந்திருக்கிறது.
வெற்றிக்கு போராடிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. மாறும் உலகத்தில் எல்லாம் மாறிக் கொண்டேதான் இருக்கின்றன. தமிழில் குடமுழுக்கு என்ற கருத்து யாருக்கும் எதிரானது அல்ல.
தமிழகத்தில் பெரும்பாலானோர் இறைநம்பிக்கை கொண்டவர்கள். இங்கு ஆத்திகர், நாத்திகர் இருவருக்குமே தாய்மொழி தமிழ்தானே? கடவுளுக்கு சமஸ்கிருதம் புரியுமென்றால், தமிழ் புரியாதா? ராஜராஜன் சிவபக்தன் என்றால், நாங்கள் அவருக்கு பக்தர்கள். ராஜராஜனின் புகழ் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கும்.
பண்டைய காலத்தில் கோயில்கள்தான் சமூகம். எதிர்காலத்தில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். புரியும் மொழிதான், கடவுளுக்கும், பக்தனுக்கும் பிடித்த மொழி" என தெரிவித்துள்ளார்.
Loading More post
“எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்” - கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!
பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத முரசு சின்னம் - கூட்டணியில் சர்ச்சை?
பீகாரில் பாஜகவுடன் கூட்டணி; மே.வ, அசாமில் எதிரணி - நிதீஷ் குமாரின் அதிரடி அரசியல் வியூகம்!
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை