உத்தரபிரதேசத்தில் அமைச்சர் சத்யதேவ் பச்சூரி துப்பாக்கி சிக்கி 5 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சேதம் அடைந்தது.
உத்தரபிரதேச மாநில பாஜக ஆட்சியில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருப்பவர் சத்யதேவ் பச்சூரி. காதி, கிராமிய கைத்தொழில், பட்டு வளர்ப்பு, ஜவுளி, சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுத்துறை ஆகியவற்றின் அமைச்சராக பச்சூரி உள்ளார். ஹார்டோவில் பிரதமர் மோடியின் 3 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய பச்சூரி திடீரென மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை லக்னோவில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடனடியாக அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் எனக் கூறினார். உடனடியாக அவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரின் ஆடைக்குள் இருந்த கைத்துப்பாக்கி எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுதடைந்தது. விசாரணையில் மருத்துவமனை ஊழியர்கள் கூறியும், விதிமுறைகளை மீறி அமைச்சரின் ஆட்கள் செயல்பட்டதாலே இந்த இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?