சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ஒருவர் செயின் பறிக்க முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை சிட்லபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குரோம்பேட்டை, ராதா நகர், பாரதி தெருவில் பெண் ஒருவர் மளிகை கடைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வரும் இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் செயினை பறிக்க முயற்சிக்கிறார். சுதாரித்துக் கொண்ட அப்பெண் இடதுபக்கமாக திரும்புகிறார். இதனால் கழுத்திலுள்ள செயினை கைகளால் பறிக்க முடியாமல் தோளில் கைப்பட்டு செயின் பறிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் அந்த இளைஞர் வேகமாக சென்று விடுகிறார்.
இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள மளிகை கடையில் தெரிவிக்க மளிகைக் கடைக்காரர் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சிட்லபாக்கம் போலீசாருக்கு தெரிவித்தார். அதனடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் குறித்து போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் இது குறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!