சென்னையில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியக் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகர், 5வது பிரதான சாலையில் வசித்து வருபவர் ராஜன் (எ) துண்டு பீடி ராஜன். இவரது மனைவி பஞ்சவர்ணம் (38). இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியை ராஜன் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. தீயில் எரிந்து அலறி துடித்த பஞ்சவர்ணத்தை அப்பகுதி மக்கள் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. அவர் 45% தீக்காயத்துடன் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேஜிஸ்திரேட்டிடம் பஞ்சவர்ணம் அளித்த வாக்குமூலத்தில், தனது கணவனே தன் மீது உள்ள ஆத்திரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட்டால் தீவைத்து கொளுத்தியதாக கூறியுள்ளார். அதனடிப்படையில் ஆதம்பாக்கம் போலீசார் ராஜனை கைது செய்தனர். மேலும், அவர் மீது 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை