ஓசூர் அருகே அரசுப் பள்ளிக்கு தாமதமாக வந்த 28 ஆசிரியர்கள் மீது முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஆசிரியா்கள், பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவது இல்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு புகார்கள் வந்தன. பள்ளியில் மாணவா்களின் தோ்ச்சி விகிதமும் குறைந்தது. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளிக்கு தாமதமாக தலைமையாசிரியா் வந்ததும், பள்ளியில் மாணவா்கள் வகுப்புக்கு வெளியே அமா்ந்திருந்ததும் தெரியவந்தது. ஆசிரியர்கள் ஒரு வாரமாக பயோ-மெட்ரிக் முறையில் தங்களது வருகையை பதிவு செய்யாமல் இருந்ததும், இரு ஆசிரியா்கள் யாரிடமும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த முதன்மைக்கல்வி அலுவர் கே.பி.மாகேஸ்வரி, பள்ளியில் பணியாற்றும் 28 ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவர் கூறும் போது, “அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியா்களின் வருகைப் பதிவை கண்காணிக்க பயோ - மெட்ரிக்
முறையை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. அனைத்து அரசுப் பள்ளியிலும் பயோ - மெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதுபோன்ற திடீர் பயோ - மெட்ரிக் வருகைப் பதிவு ஆய்வு தொடரும்” என்று தெரிவித்தார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்