கண்ணாடி பாட்டீல் மூலம் 750 எம்.எல் தண்ணீரை ‘அம்மா’ குடிநீர் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் 1 லிட்டர் ‘அம்மா’ குடிநீர் பாட்டீல் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் விற்கப்பட்டு வருகிறது. இந்தப் பாட்டீல்கள் பேருந்து நிலையங்களில் விற்கப்பட்டு வருகிறது. தற்போது வரை சுமார் 80ஆயிரம் 1 லிட்டர் ‘அம்மா’ குடிநீர் பாட்டீல்கள் அரசு சார்பில் விற்கப்பட்டுள்ளன. எனினும் இதனை வாங்குவோர் சிலர் 1 லிட்டர் குடிநீரையும் முழுவதும் குடிக்காமல் மிச்சம் வைத்துவிட்டு செல்வதால், அதிகளவில் பாட்டீல்கள் தேங்கியுள்ளன. எனவே தமிழ்நாடு அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி புதிதாக கண்ணாடியில் தயாரிக்கப்பட்ட 750 எம்.எல் அம்மா குடிநீர் பாட்டீலை விற்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாட்டீலின் விலை 5 அல்லது 7 ரூபாயாக இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கண்ணாடி பாட்டீல்களின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்படுவதுடன், தண்ணீர் வீணாவதையும் தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான புதிய இயந்திரம் வாங்குவதற்கான டெண்டர் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தப் புதிய பாட்டீல்களின் உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Loading More post
மேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்
"நான் 100% தெலுங்கானாவின் மகள்!" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா
“தமிழகத்தில் நீட் தேர்வை கைவிடுங்கள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்
PT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்?
மகாராஷ்டிரா: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு உயிரிழப்பு!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்? - மருத்துவர்கள் விளக்கம்
தாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா? - ஒரு பார்வை
குறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்
தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா? - ராகுல் காந்தி