திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றியதாக காவல் உதவி ஆய்வாளர் மீது திருநங்கை ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரத்தை சேர்ந்த திருநங்கை பபிதாரோஸ் தென்மண்டல ஐ.ஜியிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கடந்த ஜனவரி மாதம் அம்பாசமுத்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் விஜயசண்முகநாதன் ராமநாதபுரம் மாவட்ட முதுகுளத்தூரில் தன்னை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அடிக்கடி செலவிற்கு பணம் வேண்டும் என கூறி என்னிடம் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும், ஒரு கிலோ அளவிலான தங்க நகையையும் ஏமாற்றி வாங்கி கொண்டார். ஏற்கனவே திருமணமான நிலையில் பொய் சொல்லி என்னை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
உதவி ஆய்வாளர் விஜய சண்முகநாதன் அவர் குடும்பத்துடனே சேர்ந்து வாழட்டும். ஆனால் என்னுடைய பணம் மற்றும் நகைகளை திரும்பப் பெற்று தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விஜயசண்முகநாதன் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
Loading More post
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
அமமக கூட்டணியில் ஓவைசியின் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை