அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள மஹா புயல், அதி தீவிர புயலாக மாறியுள்ளது.
மஹா புயல் நேற்று மாலை நிலவரப்படி, குஜராத் மாநிலம் வேரவாலிலிருந்து மேற்கு தென்மேற்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. சுமார் 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் மஹா புயல், நாளை திசைமாறி, குஜராத் மாநிலம் நோக்கி திரும்புகிறது. தீவிர புயலாக வலுகுறையும் புயல், டையு மற்றும் துவாரகா இடையே நாளை மறுநாள் இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்போது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மஹா புயல் திசை மாறுவதால் கொங்கன் மற்றும் வட மத்திய மகாராஷ்டிராவில் கன மழை பெய்யும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் லேசனாது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!