ஓசூரில் யானை தூக்கி வீசியதில் மூதாட்டி படுகாயம் அடைந்த நிலையில், யானை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் சானமாவு பகுதியில் ஒற்றை காட்டுயானை அவ்வப்போது வட்டமிட்டு வருகிறது. இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் இந்த ஒற்றை யானை, அருகில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதாக அப்பகுதியினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த யானை பகல் நேரங்களில் வலம் வருவதால் மக்கள் அச்சமடைந்திருந்தனர். இதனால் வனத்துறையினர் தொடர்ந்து ஒற்றை யானையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் காவேரி நகர் கிராமத்தின் கல்குவாரி பகுதியில் நேற்றிரவு புகுந்த யானை, இன்று காலை விடிந்த பிறகும் காட்டிற்குள் செல்லாமல் இருந்துள்ளது.
யானை இருப்பதை அறியாத மூதாட்டி துளசியம்மா (65), கல்குவாரி அருகே உள்ள தனக்கு சொந்தமான விளை நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென யானை மூதாட்டியை தூக்கி வீசிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. யானை தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த துளசியம்மா ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், யானை தாக்கி மூதாட்டி படுகாயமடைத்திருக்கும் சம்பவத்தால், சானமாவு வனப்பகுதியை ஒட்டிய ஆழியாளம், போடூர், கோப்பச்சந்திரம், இராமாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Loading More post
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி